சோனியா மனது வைத்தாலும்... காங்கிரஸ் தீர்மானத்தால் ப.சிதம்பரம் எம்.பி. ஆவதில் சிக்கல்!
'ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; 'ஒரு நபர் ஒரு பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க கூடாது' என்ற காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தால், ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி. ஆவதில் சிக்கல் எற்பட்டுள்ளது.
Samayam Tamil 15 May 2022, 9:03 pm
ஹைலைட்ஸ்:
- திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்கீடு
- யார் எம்பி என்பதில் ப.சிதம்பரம், அழகிரிக்கு இடையே போட்டி
- காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தால் சிதம்பரம் எம்பி ஆவதில் சிக்கல்
தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் பலத்தை பொறுத்து இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக நான்கு எம்.பி.க்களையும், எதிர்க்கட்சியான அதிமுக இரண்டு எம்.பி.க்களையும் நியமித்துக் கொள்ளலாம். இதன்படி மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களின் பெயரை திமுக இன்று அதிகாரபூர்வ அறிவித்துவிட்டது. மற்றொரு சீட் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு தரப்படுவதாகவும் திமுக தெரிவித்துள்ளது.
2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக -காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியிVdபடியும், தற்போது காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 18 எம்எல்ஏக்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டும் கூட்டணி தர்மபடி தனது கடமையை திமுக முறையாக செய்துலிட்டது.
ஆனால் இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்பது போல, தமிழக காங்கிரசில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள அந்த ஒரு நபர் யார் என்பதில் கட்சியின் சீனியரான ப.சிதம்பரத்துக்கும், அவரது ஆதரவாளரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான கே.எஸ். அழகிரிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது தான் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்.
தமிழக காங்கிரசில் விரைவில் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத் தலைவர் பொறுப்பை வேறொருவருக்கு அளித்துவிட்டு, ராஜ்யசபா எம்.பி. தான் டெல்லிக்கு சென்றுவிட வேண்டும் என்பதில் கே.எஸ். அழகிரி தீர்மானமாக உள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் ஸ்டாலின், ராகுல், சோனியா என அனைத்து தலைவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிகிறது.
அத்துடன், பல்வேறு காரணங்களால் ப.சிதம்பரத்தை எம்.பி. ஆக்குவதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுவதால், அவர் மனது வைத்தால் தமக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் அழகிரி.
அதேசமயம் லோக்சபா, ராஜ்யசபா என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸுக்கு போதுமான அளவு எம்.பி.க்கள் இல்லாத நிலையில், சிதம்பரம் போன்ற அனுபவம் மிக்க நபர் சபையில் இருக்க வேண்டியது அவசியம் என சோனியா கருதுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே 2009 மக்களவை தேர்தலுக்கு பிறகு, எம்.பி. எலக்ஷனில் ப.சிதம்பரம் நேரடியாக போட்டியிடாவி்ட்டால், 2106 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார் ப.சி.
அந்த அளவுக்கு கட்சி மேலிடத்தில் தமக்கு செல்வாக்கு உள்ளதால், இந்த முறை தமிழ்நாட்டில் இருந்தே ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லி சென்றுவிடலாம் என்று கூலாக இருக்கிறாராம் சிதம்பரம். தன் மீது கொஞ்சம் அதிருப்தியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை சமாதானம் செய்ய சோனியா, ராகுல் மூலம் அவர் பேசி வருவதாகவும் தெரிகிறது.
இப்படி எம்.பி. சீட்டை பிடிப்பதில் சிதம்பரத்தும், அழகிரிக்கும் நீயா, நானா போட்டி நடைபெற்றுவரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தால், ப.சிதம்பரம் எம்.பி ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'கட்சியில் ஒருவருக்கு ஒருவர் பதவி; ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டாவது நபர் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கட்சி பணி ஆற்றியிருக்க வேண்டும்; ஒரு நபர் ஒரு பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க கூடாது' என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்த தீர்மானத்தின்படி, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 2019 இல் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். அவரது பதவி காலம் 2024 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், இரண்டாவது நபராக சிதம்பரத்துக்கும் ராஜ்யசபா எம்.பி.யாக வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
சிதம்பரம் பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் சீனியர் என்பதால், அவருக்கு எம்பி வாய்ப்பை அளிக்க ஐந்து ஆண்டுகள் கட்சி பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை அவருக்கு பொருந்தாது என்பது அவரது ஆதரவாளர்களின் பாசிடிவ் அப்ரோச்சாக உள்ளது.
இருப்பினும், 'ஒரு நபர் ஒரு பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க கூடாது' என்ற தீர்மானத்தின் இரண்டாவது பாதியின்படி, ராஜ்யசபாவில் தற்போது சிட்டிங் எம்பியாக இருக்கும் சிதம்பரத்துக்கு மீண்டும் அந்த வாய்ப்பு தரப்பட சான்சே இல்லை என்பது அழகிரி ஆதரவாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஒரு எம்பி சீட்டை பிடிக்க குரு சிதம்பரமும், அவரது சிஷ்யரான அழகிரியும் முட்டி மோதி வரும் நிலையில், ராகுலின் பார்வை, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் போன்ற இளைஞர்கள் மீது விழவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள்.
2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக -காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியிVdபடியும், தற்போது காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 18 எம்எல்ஏக்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டும் கூட்டணி தர்மபடி தனது கடமையை திமுக முறையாக செய்துலிட்டது.
ஆனால் இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்பது போல, தமிழக காங்கிரசில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள அந்த ஒரு நபர் யார் என்பதில் கட்சியின் சீனியரான ப.சிதம்பரத்துக்கும், அவரது ஆதரவாளரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான கே.எஸ். அழகிரிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது தான் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்.
தமிழக காங்கிரசில் விரைவில் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத் தலைவர் பொறுப்பை வேறொருவருக்கு அளித்துவிட்டு, ராஜ்யசபா எம்.பி. தான் டெல்லிக்கு சென்றுவிட வேண்டும் என்பதில் கே.எஸ். அழகிரி தீர்மானமாக உள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் ஸ்டாலின், ராகுல், சோனியா என அனைத்து தலைவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிகிறது.
அத்துடன், பல்வேறு காரணங்களால் ப.சிதம்பரத்தை எம்.பி. ஆக்குவதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுவதால், அவர் மனது வைத்தால் தமக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் அழகிரி.
அதேசமயம் லோக்சபா, ராஜ்யசபா என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸுக்கு போதுமான அளவு எம்.பி.க்கள் இல்லாத நிலையில், சிதம்பரம் போன்ற அனுபவம் மிக்க நபர் சபையில் இருக்க வேண்டியது அவசியம் என சோனியா கருதுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே 2009 மக்களவை தேர்தலுக்கு பிறகு, எம்.பி. எலக்ஷனில் ப.சிதம்பரம் நேரடியாக போட்டியிடாவி்ட்டால், 2106 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார் ப.சி.
அந்த அளவுக்கு கட்சி மேலிடத்தில் தமக்கு செல்வாக்கு உள்ளதால், இந்த முறை தமிழ்நாட்டில் இருந்தே ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லி சென்றுவிடலாம் என்று கூலாக இருக்கிறாராம் சிதம்பரம். தன் மீது கொஞ்சம் அதிருப்தியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை சமாதானம் செய்ய சோனியா, ராகுல் மூலம் அவர் பேசி வருவதாகவும் தெரிகிறது.
இப்படி எம்.பி. சீட்டை பிடிப்பதில் சிதம்பரத்தும், அழகிரிக்கும் நீயா, நானா போட்டி நடைபெற்றுவரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தால், ப.சிதம்பரம் எம்.பி ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'கட்சியில் ஒருவருக்கு ஒருவர் பதவி; ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டாவது நபர் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கட்சி பணி ஆற்றியிருக்க வேண்டும்; ஒரு நபர் ஒரு பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க கூடாது' என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்த தீர்மானத்தின்படி, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 2019 இல் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். அவரது பதவி காலம் 2024 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், இரண்டாவது நபராக சிதம்பரத்துக்கும் ராஜ்யசபா எம்.பி.யாக வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
சிதம்பரம் பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் சீனியர் என்பதால், அவருக்கு எம்பி வாய்ப்பை அளிக்க ஐந்து ஆண்டுகள் கட்சி பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை அவருக்கு பொருந்தாது என்பது அவரது ஆதரவாளர்களின் பாசிடிவ் அப்ரோச்சாக உள்ளது.
இருப்பினும், 'ஒரு நபர் ஒரு பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க கூடாது' என்ற தீர்மானத்தின் இரண்டாவது பாதியின்படி, ராஜ்யசபாவில் தற்போது சிட்டிங் எம்பியாக இருக்கும் சிதம்பரத்துக்கு மீண்டும் அந்த வாய்ப்பு தரப்பட சான்சே இல்லை என்பது அழகிரி ஆதரவாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஒரு எம்பி சீட்டை பிடிக்க குரு சிதம்பரமும், அவரது சிஷ்யரான அழகிரியும் முட்டி மோதி வரும் நிலையில், ராகுலின் பார்வை, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் போன்ற இளைஞர்கள் மீது விழவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள்.