ஆப்நகரம்

தமிழகத்தை முடக்கும் டெங்கு வைரஸ் பீதி: 11 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு , இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

TNN 9 Oct 2017, 4:16 pm
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு , இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil due to dengue and viral fever 11 people dead in tamil nadu
தமிழகத்தை முடக்கும் டெங்கு வைரஸ் பீதி: 11 பேர் உயிரிழப்பு


டெங்கு காய்ச்சலால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மணல்மேடு வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயி முருகன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இந்திரா நகர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முசுறியில் அருள் பிரசாத் என்ற இளைஞர் காய்ச்சலுக்கு பலியானார்.

திருப்பூரில் திவ்ய தாரணி என்ற சிறுமி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ரமா என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேபோல் சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 2 சிறுவர்கள் இன்று பரிதாபமாக பலியானர்கள். சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஞானசேகரன் மகன் சிவசக்திவேல் மற்றும் மரவனேரியில் ரஷிதா எனும் சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுபோன்ற பலி எண்ணிக்கையை தடுக்க மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Due to dengue and viral fever 11 people dead in tamil nadu

அடுத்த செய்தி