ஆப்நகரம்

டெங்கு காய்ச்சலுக்கு ஒரு நாளில் 7 பேர் பலி !

டெங்கு காய்ச்சலுக்கு மட்டும் ஒரு நாளில் 7 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.. இதனால் மக்கள் மத்தியில் அதிக மத்தியில் பதற்றம் அதிகரித்து உள்ளது.

tnn 6 Oct 2017, 11:28 am
டெங்கு காய்ச்சலுக்கு மட்டும் ஒரு நாளில் 7 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.. இதனால் மக்கள் மத்தியில் அதிக மத்தியில் பதற்றம் அதிகரித்து உள்ளது.
Samayam Tamil due to dengue fever 7 people dies in a day
டெங்கு காய்ச்சலுக்கு ஒரு நாளில் 7 பேர் பலி !


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடித்துள்ள பட்டமந்திரியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார் . இதேபோன்று பழவேற்காடு வைரவன்குப்பத்தை சேர்ந்த நாகலிங்கம் என்ற மீனவரும் ஸ்டான்லி மருத்துமனையில் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியை சேர்ந்த நளினியும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்த நளினியும் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று பலியாகியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் காய்ச்சலால் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த மாவட்டத்தில் மட்டும் 162 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் 4 வயது மகன் கவினேஷ்ம் காய்ச்சலால் உயிழந்தான்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடித்த புரிசையில் பார்வதி என்ற பெண் ஒருவாரமாக காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

நாகை மாவட்த்திலும் காய்ச்சலால் பாதிப்புகள் அதிகம் இருக்கும் நிலையில், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் , 200க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

அடுத்த செய்தி