தஞ்சாவூர் மாவட்டத்தில், கஜா புயல் பாதிப்பால் படகுகள் சேதமான நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் தொடங்கி செம்பியன்மாதேவிபட்டினம் வரை 34 மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்களில் சுமார் 20,000 பேர் நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். தவிர, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் கிராமங்களில் ஏறத்தாழ 250 பேர் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கின்றனர்.
இந்நிலையில், கஜா புயலால் 90 சதவீதத்துக்கும் அதிகமான நாட்டுப் படகுகள், விசைப் படகுகள் சேதமடைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட நாட்டுப் படகு மீனவர் நலச்சங்கத் தலைவர் ஏ. ஜெயபால் கூறுகையில், படகுகள், என்ஜின், வலை என அனைத்தும் சேதமடைந்துள்ளன. ஒரு படகின் விலை ரூ. 2 லட்சம். என்ஜின், வலையின் விலை தலா ரூ. 50,000.
ஆனால், அரசு பகுதியளவு சேதத்துக்கு ரூ. 30,000-ம், முழுமையான சேதத்துக்கு ரூ. 85,000-ம் அறிவித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மீனவர்கள் இழந்த வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வேண்டுமானால் தலா ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது.
கடலுக்குச் சென்றால் ஒரு நாளைக்கு ரூ. 500 முதல் ரூ. 2,000 வருவாய் கிடைக்கும். இப்போது, அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. வேறு தொழிலும் தெரியாததால் அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை என்று மீனவர் ஜெயபால் வேதனைபட தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கஜா புயல் பாதிப்பால் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் ரூ. 5 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு இழப்பீட்டுத் தொகை தருவதற்குப் பதிலாக முற்றிலும் சேதமடைந்த படகுக்குப் புதிய படகும், பகுதி அளவு சேதமடைந்த படகை பழுதுபார்த்தும் தந்தால் போதும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் தொடங்கி செம்பியன்மாதேவிபட்டினம் வரை 34 மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்களில் சுமார் 20,000 பேர் நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். தவிர, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் கிராமங்களில் ஏறத்தாழ 250 பேர் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கின்றனர்.
இந்நிலையில், கஜா புயலால் 90 சதவீதத்துக்கும் அதிகமான நாட்டுப் படகுகள், விசைப் படகுகள் சேதமடைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட நாட்டுப் படகு மீனவர் நலச்சங்கத் தலைவர் ஏ. ஜெயபால் கூறுகையில், படகுகள், என்ஜின், வலை என அனைத்தும் சேதமடைந்துள்ளன. ஒரு படகின் விலை ரூ. 2 லட்சம். என்ஜின், வலையின் விலை தலா ரூ. 50,000.
ஆனால், அரசு பகுதியளவு சேதத்துக்கு ரூ. 30,000-ம், முழுமையான சேதத்துக்கு ரூ. 85,000-ம் அறிவித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மீனவர்கள் இழந்த வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வேண்டுமானால் தலா ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது.
கடலுக்குச் சென்றால் ஒரு நாளைக்கு ரூ. 500 முதல் ரூ. 2,000 வருவாய் கிடைக்கும். இப்போது, அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. வேறு தொழிலும் தெரியாததால் அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை என்று மீனவர் ஜெயபால் வேதனைபட தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கஜா புயல் பாதிப்பால் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் ரூ. 5 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு இழப்பீட்டுத் தொகை தருவதற்குப் பதிலாக முற்றிலும் சேதமடைந்த படகுக்குப் புதிய படகும், பகுதி அளவு சேதமடைந்த படகை பழுதுபார்த்தும் தந்தால் போதும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.