ஆப்நகரம்

Gaja Cyclone: மீனவர்கள் 2வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை!

கஜா புயல் காரணமாக, மீனவர்கள் இன்று 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

Samayam Tamil 13 Nov 2018, 12:39 pm
கஜா புயல் எதிரொலியால், தமிழக மீனவர்கள் இன்று 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
Samayam Tamil TN1 (2)
Gaja Cyclone: மீனவர்கள் இன்று 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை!


வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தற்போது திசைமாறி கடலூர் - வேதாரண்யம் இடையே 15ம்தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் வரும் 14ம் தேதி கனமழையும், 15ம் தேதி வடதமிழகத்தில் மிகமிக கனத்த மழையும் பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 60 - 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

இதனால் நெல்லை- தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று 2வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் வழக்கம் போல், நேற்று நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்று இன்று காலை கரை திரும்பி விட்டனர். தூத்துக்குடியில் மட்டும் சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 48 மணி நேரம் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

அடுத்த செய்தி