ஆப்நகரம்

மாணவர்களுக்கு இப்படியொரு சர்ப்ரைஸ்: வெளியான அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Nov 2021, 7:20 am
கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TN School Students


வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ரேஷன் பொருள்கள் இனி கட்? தமிழக அரசு எடுக்கும் அபாய முடிவு!
நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.முருகனை இப்படி பேசுவது ஏன்? எல்லை மீறுகிறாரா அண்ணாமலை?
தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவாரூர்,திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், வேலூர், தர்ம்புரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி