ஆப்நகரம்

தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை; தமிழக அரசு வேண்டுகோள்

கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 3 Nov 2017, 2:06 am
கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil due to heavy rain tamilnadu government pray leave to the private companies
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை; தமிழக அரசு வேண்டுகோள்


சென்னையில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், முக்கிய சாலைகள் முழுவதும் ஆறு போல் நீர் ஓடியது. கார்கள், பேருந்துகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தபடி செல்வதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.

இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அவர்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி