ஆப்நகரம்

புயலால் மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

அரபிக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் எங்கெங்கு மழை பெய்யும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 15 May 2021, 3:10 pm
Samayam Tamil Tauktae cyclone
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக மாறியது. இதற்கு டவ் தே என்று பெயரிடப்பட்டுள்ளது.

டவ் தே புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரேஷன் அட்டைக்கு 2000ரூ: இதை வாங்க இவ்வளவு போராட்டமா?
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டு உருவான முதல் புயல் இதுவாகும். இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் இந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா - ஓபிஎஸ் புதிய கூட்டணி? தினகரன் மகள் திருமணம் திருப்பத்தை ஏற்படுத்துமா?

மீனவர்கள் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கர்நாடக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி