ஆப்நகரம்

மின் கட்டணம் கணக்கீடு செய்வதில் சிக்கல்: இது ஆஃபரா இல்லை ஆபத்தா?

தமிழகத்தில் மே, ஜூன் மாத மின் கட்டணத்தை கணக்கீடு செய்வதில் சிக்கல் நிலவுகிறது.

Samayam Tamil 1 May 2021, 4:29 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டிவருகிறது. முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த முறை பொது முடக்கத்தின் போது பல இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
Samayam Tamil tn electricity meter


தற்போது தமிழ்நாடு முழுக்க கொரோனா வேகமாக பரவிவருவதால் மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்வதில் பிரச்சினை நிலவுகிறது.
தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்னது மீண்டும் தர்ம யுத்தமா?
இதனால் முந்தைய மாத மின்கட்டணத்தையே மே, ஜூன் மாதங்களில் வசூலிக்க வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்குழு மின்வாரியத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது அதில், “தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி, ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மின்வாரிய ஊழியர்கள், வீடுகளுக்குச் சென்று மின் கணக்கீடு செய்தல், மின் தடை நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதால், நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெயிட் பண்ணுங்க, 11 மணிக்கு மேல பாருங்க! ட்விஸ்ட் வைக்கும் அமைச்சர்!
எனவே, வரும் நாட்களில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேலும், மின்நுகர்வோரின் வீடுகளுக்கு நேரில் சென்று மின்சாரம் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முந்தைய மாத மின்கட்டணத்தையே மே, ஜூன் மாதங்களில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் வேலை நேரம் மதியம் 2 மணி வரை குறைக்கப்பட்டது போல, மின்கட்டண வசூல் மையங்களில் பணி நேரத்தை மதியம் 1.30 வரை குறைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பட்டியலை அடித்து எழுதிய ஸ்டாலின்: இதுதான் காரணமா?

இந்த கோரிக்கையை மின்வாரியம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பழைய கட்டணமே மீண்டும் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி