ஆப்நகரம்

கந்துவட்டிக் கொடுமை: பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுப்பதில் ஏற்பட்ட தொழில் போட்டிக் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 30 Mar 2018, 3:23 pm
திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுப்பதில் ஏற்பட்ட தொழில் போட்டிக் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil download


நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு பகுதியில் குப்புசாமி வசித்து வந்தார். அவர் தறிப்பட்டறை மற்றும் கந்துவட்டி தொழில் செய்துவந்தார். கடந்த 28 ஆம் தேதிகாலை இருச்சக்கர வாகனத்தில் இவர் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்குப் போராடிய நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செங்கோடு புறநகர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

தொழில் போட்டியால் குப்புசாமி மீது ஆத்திரத்தில் இருந்த தனபால் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கமல்ராஜ் என்பவருடன் சேர்ந்துஇந்தக் கொலையை செய்து இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தேவனாங்குறிச்சி பகுதிக்கு குப்புசாமியை வரவழைத்து பட்டப்பகலில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

கொலை செய்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி