ஆப்நகரம்

தென்பெண்ணை கரையோரங்களில் வெள்ள அபாயம்!!

கேஆர்பி அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் தென்பெண்ணை கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

TNN 22 Aug 2017, 3:16 pm
கேஆர்பி அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் தென்பெண்ணை கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
Samayam Tamil due to water rise in kelavarapalli dam krishnadevaraya dam flood alert were given to thenpannai river bank
தென்பெண்ணை கரையோரங்களில் வெள்ள அபாயம்!!


தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 960 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்ததால் , தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 472 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 967 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 441 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் நேற்று முன்தினம் 50.50 அடியாக இருந்தது . நேற்று காலை 50.90 அடியாக உயர்ந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி என்பதால் , அணையின் பாதுகாப்பைக் கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை கரையோரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

due to water rise in kelavarapalli dam, krishnadevaraya dam flood alert were given to thenpannai river bank

அடுத்த செய்தி