ஆப்நகரம்

கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா:ஹோட்டல் பெண் ஊழியர் பலி..!

சென்னையிலுள்ள உணவகம் ஒன்றில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் போது கிரைண்டரில் துப்பட்டா சிக்கியதில் பெண் ஊழியர் உயிரிழந்தார்.

TNN 14 Sep 2016, 5:55 pm
சென்னையிலுள்ள உணவகம் ஒன்றில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் போது கிரைண்டரில் துப்பட்டா சிக்கியதில் பெண் ஊழியர் உயிரிழந்தார்.
Samayam Tamil dupatta ends a young ladys life
கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா:ஹோட்டல் பெண் ஊழியர் பலி..!


சென்னை அரும்பாக்கத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 24 வயதான ஹெப்சிபா என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கடந்த செவ்வாயன்று மாலை,உணவகத்தில் உள்ள கிரைண்டரில் ஹெப்சிபா மாவு அரைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் துப்பட்டா,கிரைண்டரில் சிக்கியுள்ளது.இதனை ஹெப்சிபா கவனிக்காததால்,கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா அவரின் கழுத்தை இறுக்கியுள்ளது.இதனால் மூச்சுத் திணறி அந்த இடத்திலேயே ஹெப்சிபா மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

பின்னர் அருகிலிருந்து சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.ஆனால் சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி ஹெப்சிபா உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி