ஆப்நகரம்

திருநாங்கூர் கருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி!

திருநாங்கூர் கருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார்.

Samayam Tamil 19 Jan 2018, 10:24 am
திருநாங்கூர் கருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார்.
Samayam Tamil durga stalin parcipated in thirunangur karuda seva
திருநாங்கூர் கருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி!


நாகை மாவட்டம் சீர்காழியில் 108 வைணவ திவ்யதேசங்களை உள்ளடக்கிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையை முன்னிட்டு 11 கருடசேவை உத்சவம் நடைபெறும்.

இந்தாண்டு 124ஆம் ஆண்டு கருடசேவை உத்சவம் நடைபெறுவதை முன்னிட்டு, 11 பெருமாள்களும் திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் எழுந்தருள சிறப்புத் திருமஞ்சணம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் மட்டுமன்றி பல வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், இந்த விழாவில் கலந்து கொண்டனர். தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் மனைவி, துர்கா ஸ்டாலினும் இதில் கலந்து கொண்டார்.

அடுத்த செய்தி