ஆப்நகரம்

இடைத்தேர்தல் அந்தப்பக்கம்... திருப்பதி தரிசனம் இந்தப்பக்கம்: திருமலையில் துர்கா ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நடைபெற்ற அபிஷேக சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

Samayam Tamil 11 Oct 2019, 1:26 pm
இடைத்தேர்தல், முதல்வர் கனவு , திராவிடத்தின் வெற்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, இறைவன் சந்நிதி, பக்திநெறி, அபிஷேக ஆராதனைகள் என்று மறுபக்கம் பிசியாக இருக்கிறார் துர்கா ஸ்டாலின்.
Samayam Tamil durga stalin wife at thirumala thirupathi
இடைத்தேர்தல் அந்தப்பக்கம்... திருப்பதி தரிசனம் இந்தப்பக்கம்: திருமலையில் துர்கா ஸ்டாலின்


இடைத்தேர்தல் வெற்றிக்காகவும் , தன் கணவரின் உடல்நலத்துக்காகவும் வேண்டிக்கொள்ள திருப்பதி வந்திருக்கிறாராம் துர்கா ஸ்டாலின். நேற்று இரவே (10.10.2019) திருப்பதி ஏழுமலைக்கு வந்த துர்கா ஸ்டாலின் , இரவு திருப்பதி மலையிலேயே தங்கி அதிகாலை பயபக்தியுடன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.

ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே சிறப்பாக நடைபெறும் அபிஷேக சேவையில் தானும் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தியிருக்கிறார்.

வழிபாட்டிற்குப் பின்னர் துர்கா ஸ்டாலின் மற்றும் அவரோடு உடன் வந்த மற்றவர்களுக்கும் கோயிலில் அமைந்துள்ள ரங்க நாயகர் மண்டபத்தில் தீர்த்தம் மற்றும் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சேஷ வஸ்திரத்தை கோவில் அர்ச்சகர்கள் துர்கா ஸ்டாலினுக்கு வேத ஆசியுடன் வழங்கினர்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுவரும் நேரம், எல்லாம் நல்லதாக நடக்க வேண்டி பாலாஜியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.. என்னவோ போங்க...

அடுத்த செய்தி