ஆப்நகரம்

கோலாகலமாக நடைபெற்ற குலசேகரன் பட்டிணம் தசரா விழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணம் கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

Samayam Tamil 20 Oct 2018, 9:42 am
விஜயதசமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணம் கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
Samayam Tamil 13.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மைசூருக்கு அடுத்தப்படியாக, குலசையில் தான் தசரா பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றதாக நடைபெறுகிறது.

பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மன், பத்ரகாளி, நாடோடி மக்கள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வந்தனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமாா் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனா்.

மேலும் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு இரவு 12 மணியளவில் நடைபெற்றது.

அடுத்த செய்தி