ஆப்நகரம்

தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: இ-பாஸ் கட்டாயம்!

தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Samayam Tamil 31 May 2020, 5:55 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்திருந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன்படி, தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி (நாளை) முதல் கோவை-மயிலாடுதுறை-கோவை, மதுரை-விழுப்புரம்-மதுரை, திருச்சி- நாகர்கோயில்-திருச்சி, கோவை-காட்பாடி-கோவை உள்ளிட்ட நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் பயணங்களுக்கான முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது.

இதனிடையே, தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டலங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. ஆனால், மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பயணத்துக்கு இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எம். கேர்ஸ் நிதியம் பொது அதிகார அமைப்பு அல்ல: பிரதமர் அலுவலகம்!

அரசு உத்தரவின்படி ரயில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகள் இ-பாஸ் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில்மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன்லைன் மூலம் https://TNepass.tnega.org தங்களது விவரங்களை பதிவுசெய்து இ-பாஸ் பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு

அரசு உத்தரவு

அரசு உத்தரவு


இந்த நிலையில், தமிழகத்தில் நாளை 4 வழித்தடங்களிலும் செல்லும் ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தாலும் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி