ஆப்நகரம்

எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை: ராஜேஷ் லக்கானி தகவல்

வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் எளிய முறையில் அவற்றை பெறுவதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

TOI Contributor 9 Mar 2016, 6:15 pm
சென்னை: வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் எளிய முறையில் அவற்றை பெறுவதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil easiest way to getting voter id card rajesh lakhoni
எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை: ராஜேஷ் லக்கானி தகவல்


இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இது வரை பெறாதவர்கள் எளிய முறையில் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையம் வரும் திங்கள்கிழமை முதல் செயல்படும். இந்த வசதி அடுத்த மாதம் 15-ம் தேதி வரை இருக்கும்.

இந்த மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் . இத்தகைய மையங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். தபால் மூலம் பெற விரும்பினால் கூடுதலாக ஸ்பீடு போஸ்ட் கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 மாதிரி வாக்குச் சாவடி என மொத்தம் 1000 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மேலும், வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் நெரிசலை தவிர்க்க 1950 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விவரத்தை தெரிந்துக் கொள்ளும் வசதி இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை ரூ.45 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை 1,014 தேர்தல் விதிமீறல் புகார்கள் வந்துள்ளன.

அடுத்த செய்தி