ஆப்நகரம்

இரட்டை இலை எங்களுக்கே: உரிமை கொண்டாடும் ஈபிஎஸ் அணி

இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களுடன் கோரிக்கை வைத்த்துள்ளனர்.

TNN 22 Sep 2017, 4:53 pm
இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களுடன் கோரிக்கை வைத்த்துள்ளனர்.
Samayam Tamil ec fixes hearing on october 5 for two leaves symbol
இரட்டை இலை எங்களுக்கே: உரிமை கொண்டாடும் ஈபிஎஸ் அணி


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விளையாடியதால் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் முடிங்கியது. அப்போது, எதிரும் புதிருமாக அடித்துக்கொண்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இப்போது ஒன்றுகூடி இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடுகின்றன.

இதற்காக, முதல்வர் எடப்பாடி அணியின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார், கே.பி.முனுசாமி உட்பட முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்று டேரா போட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குச் செல்ல நாள் பார்த்து காத்திருந்த அவர்கள் இன்று தலைமைத் தேர்தல் ஆணையம் சென்றனர்.

அப்போது, செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த அதிமுக அம்மா – அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிகளின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்பித்துள்ளனர் மேலும், 85 சதவீதத்திற்கு அதிகமான எம்எல்ஏக்கள் பங்கேற்றனர் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அக்டோபர் 5ஆம் தேதி இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் வரும் செப்., 29ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்களை அனைத்து தரப்பினரும் சமர்ப்பித்துவிட வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி