ஆப்நகரம்

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: மார்ச் 20-க்குள் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக வருகிற திங்கள்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 15 Mar 2017, 6:23 pm
புதுதில்லி: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக வருகிற திங்கள்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil ec likely to announce about admk general secretary issue on with in monday
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: மார்ச் 20-க்குள் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, முதல்வராக பன்னீர்செல்வமும், தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்றனர். அதன்பின்னர், கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தேன் என அதிரடி தெரிவித்த பன்னீர்செல்வம், அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக பிளவு கண்டது.

தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பி வரும் பன்னீர்செல்வம் அணியினர், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது கட்சி விதிகளுக்கு புறம்பானது. எனவே, அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவின் மீது பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், சசிகலாவுக்கு பதிலாக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் டிடிவி தினகரன் பதிலளித்தார். இதனை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. பின்னர், சிறையில் இருந்த சசிகலா அந்த மனுவுக்கு விளக்கம் அளித்து, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.

சசிகலாவின் விளக்கத்துக்கு பதிலளிக்க ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அதற்கு விளக்கம் அளித்து 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் நேற்று தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? அல்லது செல்லாதா? என்பது குறித்து வருகிற 20-ம் தேதிக்குள் அதவாது, திங்கள்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
EC likely to announce about ADMK general secretary issue on with in Monday

அடுத்த செய்தி