ஆப்நகரம்

தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்: ஜவாஹிருல்லா

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

TNN 25 Mar 2017, 2:33 pm
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil ec must act impartially in rk nagar jawahirullah
தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்: ஜவாஹிருல்லா


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பில் தீபா, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் சாட்சி சார்பாக கலைக்கோட்டுதயம், பாஜக சார்பாக கங்கை அமரன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்கே நகர் தேர்தலை முன்னிட்டு திமுக அளித்த புகாரின் காரணமாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியான பத்மஜாவும் மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவளிக்கும் என ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
EC must act impartially in RK Nagar: Jawahirullah

அடுத்த செய்தி