ஆப்நகரம்

சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

விதிகளுக்கு புறம்பாக சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் எம்.பி மைத்திரேயன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.

TOI Contributor 17 Feb 2017, 7:43 pm
விதிகளுக்கு புறம்பாக சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் எம்.பி மைத்திரேயன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
Samayam Tamil ec seeks response of aiadmk on sasikala ops complaint
சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


விதிகளுக்கு புறம்பாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம், பன்னீர் செல்வம் தரப்பு புகாருக்கு வரும் 28ம் தேதிக்குள் பதிளலிக்க உத்தரவிட்டு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நாளுக்குள் பதிலளிக்க தவறினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சசிகலா தரப்பு அளிக்கும் பதிலில், ஏதேனும் தவறு இருந்தால், அதன் மூலம் அவர் எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கப்பட்டது என கேள்வி எழும், அதற்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் பெங்களூரு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி