ஆப்நகரம்

தமிழ்நாட்டு ’தல’ மீது வழக்குப்போட சொன்ன தேர்தல் ஆணையம்...!

தமிழக முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

TNN 18 Jun 2017, 2:35 pm
சென்னை: தமிழக முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
Samayam Tamil ec suggests a case should be filed against tn cm
தமிழ்நாட்டு ’தல’ மீது வழக்குப்போட சொன்ன தேர்தல் ஆணையம்...!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பணப்பட்டுவாடா நடந்ததாக புகார்கள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் வைரக்கண்ணு என்பவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, தேர்தல் ஆணையத்திடம் கேள்விகள் எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆணையம், பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

EC suggests a case should be filed against TN CM.

அடுத்த செய்தி