ஆப்நகரம்

நாளை இரு தரப்பினருக்கும் வேறு வேறு சின்னங்கள்..!

நாளை சசிகலா மற்றும் ஓ.பி எஸ் ஆகிய அணிகளை சேர்ந்தவர்களுக்கு வேறு,வேறு சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்க உள்ளது.

TNN 23 Mar 2017, 3:07 am
நாளை இரு தரப்பினருக்கும் வேறு வேறு சின்னங்கள்..!
Samayam Tamil ec will allot seperate symbol for ops and sasikala team
நாளை இரு தரப்பினருக்கும் வேறு வேறு சின்னங்கள்..!

நாளை சசிகலா மற்றும் ஓ.பி எஸ் ஆகிய அணிகளை சேர்ந்தவர்களுக்கு வேறு,வேறு சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்க உள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இரு அணியினரிடம் நடத்தப்பட்ட பல மணி நேர விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை, எந்த அணிக்கும் அளிக்காமல் முடக்கிவிட என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல் அதிமுக என்ற பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இரு அணிகளும் தனித்தனியாக தங்கள் கட்சியுடன் கூடிய வேறு ஒரு பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 85 சின்னங்களில் ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து இன்று காலை 10 மணிக்குள் இரு அணிகளும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி முடிவால் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகிய அணிகள், வேறுவேறு சின்னங்களை பெறுவது மட்டுமின்றி, பெற உள்ளன.

EC will allot seperate symbol for OPS and Sasikala team

அடுத்த செய்தி