ஆப்நகரம்

கார் விபத்தில் நண்பர்கள் 3 பேர் பலி: புதுவை சென்ற போது பரிதாபம்

புதுவைக்கு சென்ற நண்பர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

TNN 9 Oct 2016, 10:44 am
சென்னை: புதுவைக்கு சென்ற நண்பர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil ecr car accident 3 dead 5 injured
கார் விபத்தில் நண்பர்கள் 3 பேர் பலி: புதுவை சென்ற போது பரிதாபம்


நண்பர்கள் குழு ஒன்று புதுவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தது. கோட்டக்குப்பம் அருகே நண்பர்களின் சென்ற கார் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவர், மரம் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் சென்ற கார் விபதுக்குள்ளன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ECR car accident 3 dead; 5 injured #ECR #CarAccident

அடுத்த செய்தி