இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சசிகலாவால் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்,நேற்று இரவு 7.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தார்.இந்த சந்திப்பானது வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது.ஆனால் இந்த சந்திப்பின் போது,சாதகமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க,ஆளுநர் வித்யா சாகர் ராவ் நேரம் ஒதுக்கியிருந்தார்.மேலும் இந்த அழைப்பானது ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர்,இன்று காலை 10.30 மணிக்கு கூவத்தூர் சொகுசு விடுதியிலிருந்து கிளம்பி,11.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையை அடைந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இன்று ஆட்சியமைப்பது குறித்து முக்கிய முடிவை ஆளுநர் எடுப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில்,எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இந்த தகவலை தெரிவித்து வருகின்றனர்.இதனால் தமிழக அரசியல் வட்டாரம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.
Edapati Palanisamy and team met TN Governor
சசிகலாவால் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்,நேற்று இரவு 7.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தார்.இந்த சந்திப்பானது வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது.ஆனால் இந்த சந்திப்பின் போது,சாதகமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க,ஆளுநர் வித்யா சாகர் ராவ் நேரம் ஒதுக்கியிருந்தார்.மேலும் இந்த அழைப்பானது ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர்,இன்று காலை 10.30 மணிக்கு கூவத்தூர் சொகுசு விடுதியிலிருந்து கிளம்பி,11.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையை அடைந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இன்று ஆட்சியமைப்பது குறித்து முக்கிய முடிவை ஆளுநர் எடுப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில்,எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இந்த தகவலை தெரிவித்து வருகின்றனர்.இதனால் தமிழக அரசியல் வட்டாரம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.
Edapati Palanisamy and team met TN Governor