ஆப்நகரம்

“எடப்பாடி பழனிச்சாமி என்னைப்பார்த்து சிரிக்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் கிண்டல்!

“எடப்பாடி பழனிச்சாமி என்னைப்பார்த்து சிரிக்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் கிண்டல்!

TOI Contributor 17 Feb 2017, 11:44 am
நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் அங்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி என்னைப்பார்த்து சிரிக்கக்கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil edappadi palanaisami should not smile at me says mk stalin
“எடப்பாடி பழனிச்சாமி என்னைப்பார்த்து சிரிக்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் கிண்டல்!


தமிழக முதல்வராக புதிதாக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்தப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது என்றார். நாளை பொதுவாக்கெடுப்பிற்கு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்னைப்பார்த்து சிரிக்கக்கூடாது என்று கிண்டல் செய்துள்ளார். ஏற்கெனவே சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அவர்கள் ஸ்டாலினை பார்த்து சிரித்ததால், ஓபிஎஸ் செயல்பாடுகளுக்கு பின்னால் திமுக இருக்கிறது என்று சசிகலா குற்றம் சாட்டியதை அடுத்து இவ்வாறு கிண்டலாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி