ஆப்நகரம்

madurai fire accident: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

மதுரையில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன்,கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது

Samayam Tamil 14 Nov 2020, 3:16 pm
மதுரை விளக்குத்தூண் பகுதியிலுள்ள நவபத் கானா தெருவில், இயங்கி வந்த பிரபல ஜவுளி கடையில் நேற்று இரவு தீ பற்றியது. அதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை சிட்டி மற்றும் அனுப்பானடி நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி


இந்நிலையில், தீயை அணைக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் கிருஷ்ணமூர்த்தி(30), சிவராஜன்(36), கல்யாண குமார்(30) மற்றும் சின்னகருப்பு(30) ஆகிய நான்கு தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில், சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி இருவரும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரும் லாவகமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபட்டபோது இரு வீரர்கள் பலியான சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் சோகத்தை ஆழ்த்தியது. வீரர்களின் மரணத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன்,கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

டிசம்பரில் உருவாகிறதா கலைஞர் திமுக? அழகிரி பற்றவைத்த பட்டாசு!

அந்த அறிவிப்பில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் தீ விபத்தில் காயமடைந்த கல்யாண குமார்(30) மற்றும் சின்னகருப்பு(30) இருவருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்ககோரி தமிழக அரசை வலியுறுத்தியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துளளார்.

அடுத்த செய்தி