ஆப்நகரம்

ஓபிஎஸ்ஸை வீட்டை விட்டு விரட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

ஓபிஎஸ்ஸை வீட்டை விட்டு விரட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

TOI Contributor 17 Feb 2017, 10:12 am
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளதை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil edappadi palanisami sent notice to ops to vacate the home
ஓபிஎஸ்ஸை வீட்டை விட்டு விரட்டும் எடப்பாடி பழனிச்சாமி!


சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் தான் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். நிதி அமைச்சராக இருந்த போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த வீடு கொடுக்கப்பட்டது. இந்த வீட்டில் இருந்து தான் சசிகலாவுக்கு எதிராக அணியை ஓபிஎஸ் திரட்டிவருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ளதை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை மூலம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடி தரப்படுகிறது. ஓபிஎஸ் உடனடியாக காலி செய்யாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவு நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து ஓபிஎஸ் காலி செய்யும் பட்சத்தில் எம்எல்ஏக்கள் விடுதியில் அறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி