ஆப்நகரம்

எஸ்சி, எஸ்டி உதவிக்தொகை: மத்திய அரசு ரூ.1,803 கோடி பாக்கி

கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 30 May 2018, 5:05 pm
கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil modi-palaniswami-759


மத்திய அரசு எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி படிப்புக்காக கல்வி உதவித் தொகை வழங்குகிறது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் உடனடி சேர்க்கையில் இணைந்து பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இத்தனை நாளாக வழங்கி வந்த உதவித் தொகையை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விதியை ரத்துசெய்ய வலியறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அரசின் இந்த முடிவு உயர் மற்றும் தொழில் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்பைப் பறிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு ரூ.1,803 கோடியே 50 லட்சம் நிலுவை வைத்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் நிலுவைத் தொகை தமிழகத்திற்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி