ஆப்நகரம்

ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர்: 9,10,11 மாணவர்கள் ‘ஆல் பாஸ்’!

9, 10, 11 வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Feb 2021, 12:03 pm
தமிழ்நாட்டில் கொரோனா பொது முடக்கத்தில் விதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளைத் தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி நேரடி வகுப்புகள் ஆரம்பமாகின.
Samayam Tamil TN exam cancel


மேலும் மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் நோக்கில் அனைத்து வகுப்பினருக்கும் பாடத்திட்டத்தில் 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டன.

ஓய்வு பெறும் வயது 60: முதல்வர் அதிரடி அறிவிப்பு!
9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கின. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 முதல் 21 வரை தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது என்ற கேள்வி எழுந்தது.

திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்டுகள்? திரைமறைவில் நடந்தது என்ன?

இந்நிலையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த ஆண்டும் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி