ஆப்நகரம்

அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 2 May 2023, 12:08 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருந்த விஏஓ சில தினங்களுக்கு முன்னர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல் காரணமாக காவல் நிலையத்தில் அதிகாரிகள் அடைக்கலம் புகுவதும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்வதும் அதிகரித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil edappadi palanisamy


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய VAO தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், சில தினங்களுக்கு முன்னாள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு VAO மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ,

தற்போது 2019 அதிமுக ஆட்சியில் சிறப்பாக பணியாற்றி என்னிடம் விருது பெற்ற கிராம நிர்வாக அதிகாரி அருப்புக்கோட்டை ,களக்காரி VAO திரு.துரை.பிருத்விராஜ் தற்போது தன் பணியை நேர்மையாக செய்ய இயலவில்லை என்பதால் வேலையை ராஜினாமா செய்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த விடியா ஆட்சியில் இடம் கிடையாது என்பதும் இதன்மூலம் நிருபணமாகிறது.
தமிழ்நாட்டு மாடலை பிரதியெடுக்கும் தேசிய கட்சிகள்: இப்போ புரியுதா வளர்ச்சி எப்படி வந்ததுன்னு?
இவ்வாட்சியில் அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும் , மக்கள் பணி செய்வதற்கு நிர்வாகமே தடையாக இருப்பதாலும் பல்வேறு நிர்வாக திறமையுள்ள அதிகாரிகளை இழந்து வருகிறோம்.
அமைச்சரவைக் கூட்டம்: என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும்? அமைச்சர்கள் மாற்றம், நீக்கம் இருக்குமா?
அரசு அதிகாரிகள் என்றும் மனம் தளராது, தொடர்ந்து மக்களுக்கு நல்ல பணிகள் பல செய்திட வேண்டுகோள் விடுக்கிறேன். விரைவில் கழக ஆட்சி மலரும். நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி