ஆப்நகரம்

உதயநிதி, அன்பில் மகேஷுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்: இனிமே இப்படி நடக்க கூடாது!

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 10 Jun 2023, 10:45 am
தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் மற்ற மாநில மாணவர்கள் கலந்துகொள்ளும் நிலையில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. போட்டிகளுக்கு தயாரகி வந்த மாணவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.
Samayam Tamil eps  anbil magesh and udhay


இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “School Games Federation of India, பள்ளி மாணாக்கர்களுக்காக வருடந்தோறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம், இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் Form-4 சான்றிதழ்கள் விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறவும் வாய்ப்பாக அமையும்.
வேலூரை மிரட்டிய திடீர் புயல்.. கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன காரணத்தை பாருங்க..
இந்நிலையில் கடந்த ஆண்டு SGFI 301மாணவர்களுக்கு வாய்ப்பளித்து அனுப்பிய அறிக்கையை இந்த விடியா திமுக அரசு முறையாக கையாளாமல் பாராமுகமாக இருந்ததன் விளைவாக இன்றைக்கு தமிழக மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர்.

அயராத உறுதியாலும் உழைப்பாலும் தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டிற்காக தங்களை முழுமையாக கட்டமைத்துக் கொண்டு, தயார் செய்திருந்த மாணவர்களின் எதிர்காலம் இந்த அரசின் மெத்தனப் போக்கால் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது?

ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்: நோ சென்ன இறையன்பு - கோட்டையில் நிகழும் பெரிய மாற்றம்!

தனது நிர்வாகத் திறமையின்மையால் விளையாட்டுத் துறையில் தமிழக மாணவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்த இந்த கையாளாகாத அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு காரணமான பள்ளி கல்வித்துறை அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் இனிவரும் காலங்களிலாவது தங்கள் துறை சார்ந்த பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி