ஆப்நகரம்

தமிழக அரசு இந்த கொடுமைக்கு முடிவு கட்டுமா? இபிஎஸ் கோரிக்கை!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Samayam Tamil 8 Jun 2022, 2:15 pm
கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது, ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
Samayam Tamil Edappadi Palaniswami


கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணத்தை ஈட்ட முயற்சித்து உள்ளதையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதே கருத்தை வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு சென்ற உத்தரவு!
“கடலூர்,புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் திரு.செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

கள்ள லாட்டரி, ஆன்லைன் ரம்மி, கந்துவட்டி கொடுமை என எதுவெல்லாம் தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென மாண்புமிகு அம்மா அவர்களும் அம்மா அரசும் தடை செய்ததோ அவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன.
உண்மையை மறைக்கிறாரா அமைச்சர்? கொந்தளித்த அன்புமணி
கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்? கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி