கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இப்பெரும் விபத்து கேரளாவை மட்டுமல்ல தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.முதல்வரின் டிவிட்டர் பதிவு, ''கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் இன்று (07.08.2020) அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
''இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரளா முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
முன்னதாக கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுமபத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலா 5 லட்சம் ரூபாயை அறிவித்துள்ளார். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் மொட்டத்த செலவை அரசே ஏற்கும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.முதல்வரின் டிவிட்டர் பதிவு, ''கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் இன்று (07.08.2020) அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
''இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரளா முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
முன்னதாக கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுமபத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலா 5 லட்சம் ரூபாயை அறிவித்துள்ளார். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் மொட்டத்த செலவை அரசே ஏற்கும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.