ஆப்நகரம்

ஓபிஎஸ்ஸோடு இணைந்து செயல்பட முடியாது: எடப்பாடி திட்டவட்டம்!

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Aug 2022, 12:05 pm
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து இன்று எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்தார்.
Samayam Tamil ops and eps


உயர் நீதிமன்ற உத்தரவு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த அழைப்பை ஏற்க மறுத்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “உழைக்காமல் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பதவி வேண்டும் என்று நினைப்பவர் ஓ.பன்னீர் செல்வம். கட்சிக்கு தலைமை தாங்கிய போதே அதிமுக அலுவலகத்தை குண்டர்கள், ரவுடிகளோடு சென்று கதவுகளை உடைத்து பொருள்களை சேதப்படுத்தினார். அவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?” என்று கூறினார்.

அடுத்த செய்தி