முதல்வர் வேட்பாளரை எம்.எல்.ஏக்கள் கூடி முடிவெடுப்பார்கள் என செல்லூர் ராஜு வெடியின் திரியைக் கிள்ள, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என பற்றவைத்தார் ராஜேந்திர பாலாஜி. அன்றிலிருந்து அதிமுகவுக்குள் சரவெடிச் சத்தம்தான் கேட்கிறது.
கடம்பூர் ராஜு, உதயகுமார், ஜெயக்குமார் என ஒருவர் பின் ஒருவராக கருத்து தெரிவிக்க ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக அறியப்படும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி, இதில் கட்சி தலைமை முடிவெடுத்து அறிவிக்கும் என்றனர். ஓ. பன்னீர் செல்வமும் எம்ஜிஆர் பாடலை மேற்கோள்காட்டி பிரச்சினையை முடிக்கப் பார்த்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தேனியில் 2021இல் ஓபிஎஸ்தான் முதல்வர் என போஸ்டர்கள் ஒட்டினர்.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதன்பின் அவர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்று ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினர்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸ் வீட்டில் தீவிர ஆலோசனை!
அதன்பின் அவர்கள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்து ஒவ்வொருவராக வெளியே வந்தனர். செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்றர்.
45 நிமிடங்களுக்கும் மேலாக ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் மீண்டும் இபிஎஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடம்பூர் ராஜு, உதயகுமார், ஜெயக்குமார் என ஒருவர் பின் ஒருவராக கருத்து தெரிவிக்க ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக அறியப்படும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி, இதில் கட்சி தலைமை முடிவெடுத்து அறிவிக்கும் என்றனர். ஓ. பன்னீர் செல்வமும் எம்ஜிஆர் பாடலை மேற்கோள்காட்டி பிரச்சினையை முடிக்கப் பார்த்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தேனியில் 2021இல் ஓபிஎஸ்தான் முதல்வர் என போஸ்டர்கள் ஒட்டினர்.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதன்பின் அவர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்று ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினர்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸ் வீட்டில் தீவிர ஆலோசனை!
அதன்பின் அவர்கள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்து ஒவ்வொருவராக வெளியே வந்தனர். செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்றர்.
45 நிமிடங்களுக்கும் மேலாக ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் மீண்டும் இபிஎஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.