ஆப்நகரம்

கெத்து காட்டிய எடப்பாடி, அட்ரஸை தொலைத்த டிடிவி - ஆர்.பி.உதயகுமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக வரலாற்று சாதனை புரிந்துள்ளதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Jul 2021, 6:49 am
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிறது. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியமைத்துள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது.
Samayam Tamil edappadi palanisamy


பல இடங்களில் குறைந்த அளவிலான வாக்குகளில் வெற்றி பெற்றதால் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் அதிமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் என ஆர்.பி.உதயகுமார் செல்லும் இடங்களிலெல்லாம் கூறிவருகிறார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: முடிவை அறிவித்த அமைச்சர்!
மதுரை திருமங்கலம் அருகே மதுரை மேற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மதுரை மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார்.

ஸ்டாலினை முந்திய எடப்பாடி

அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்களில் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிக வாக்குகளை பெற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைவிட அதிக வாக்குகளை பெற்றதும் எடப்பாடி பழனிசாமிதான். இதன் மூலம் உண்மையாகவே தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பது தெரிகிறது.

வெற்றி வித்தியாசம் இவ்வளவு தான்!

“இதேபோல சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 1,43,85,410 வாக்குகளை மக்கள் அள்ளி தந்தார்கள். திமுக 1,56,87,421 வாக்குகள் பெற்றது. இதன் வாக்கு வித்தியாசம் 3 சதவீதம்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், திமுக நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட தற்போது குறைவான வாக்குகளைதான் பெற்றுள்ளது. இதை வைத்து பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் உண்மையான வெற்றி திமுகவுக்கு கிடையாது, அதிமுகவுக்குதான்” என்று கூறினார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் ஏரியாவில் சவுண்டு கூட்டும் சசிகலா
விலாசம் இழந்த அமமுக

தனது பேச்சில் டிடிவி தினகரனின் அமமுகவையும் அட்டாக் செய்த உதயகுமார், “அமமுக என்ற கட்சி உருவாகும்போதே ஆட்சியைப் பிடிப்போம் என்று இல்லாமல் அதிமுகவை அழிப்போம், இரட்டை இலையை முடக்குவோம், அதிமுகவை கைப்பற்றுவோம் என்று நினைத்தார்கள். உலகிலேயே ஒரு கட்சியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சி இன்று விலாசத்தை இழந்து நிற்கிறது” என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Edappadi palanisamy, MK stalin,TTV dinakaran,R.B.Udhayakumar,admk, எடப்பாடி பழனிசாமி, அமமுக, ஸ்டாலின், ஆர்.பி.உதயகுமார், டிடிவி தினகரன்

அடுத்த செய்தி