ஆப்நகரம்

எடப்பாடி எவ்வளவு முயற்சித்தும் நடக்காத அந்த விஷயம்; கடைசியில இப்படி நடந்திருச்சே!

சென்னை: செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

Samayam Tamil 15 Dec 2018, 11:40 pm
அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி. இவர் ஜெயலலிதா மறைவிற்கு பின், டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். பின்னர் அமமுக என்ற கட்சியில் முக்கிய பொறுப்பில் இயங்கி வந்தார்.
Samayam Tamil Palaniswami


இந்த சூழலில் தனது கட்சி தலைமை டிடிவி தினகரன் மீதான அதிருப்தியில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் டிடிவி மீது செந்தில் பாலாஜி அதிருப்தியில் இருக்கும் தகவல், ஒரு மாதத்திற்கு முன்பே, தமிழக உளவுத்துறை அதிகாரிகள் முதலமைச்சர் பழனிசாமிக்கு தெரிவித்துள்ளனர். உடனே சேலம், கரூர் மாவட்டக் கட்சிக்காரர்கள் சிலரை அழைத்து பேசினார்.

செந்தில் பாலாஜி எக்காரணம் கொண்டு, அமமுகவில் இருந்து விலகி திமுக பக்கம் சென்று விடக்கூடாது. எப்படியாவது அதிமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சேலம் ஆத்தூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் செந்தில் பாலாஜியிடம் பேசியுள்ளார்.

அப்போது, கரூர் மாவட்டத்தில் அதிமுக முக்கிய பிரமுகராக இருக்கும் ஒருவர், தன்னை அரசியலில் இருந்தே ஒழிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவர் அதிமுகவில் இருக்கும் வரை, நான் அங்கு செல்வது சரியாக இருக்காது என்று சொல்லி திருப்பி அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் முதலமைச்சர் பழனிசாமியின் முயற்சி எடுபடாமல் போய்விட்டது.

அடுத்த செய்தி