ஆப்நகரம்

அதிமுக உச்ச பதவி யாருக்கு? தேர்தல் ஆணையம் யாரை கை காட்டப் போகிறது?

அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Edited byமரிய தங்கராஜ் | Samayam Tamil 19 Apr 2023, 3:34 pm
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Samayam Tamil edappadi palanisamy


கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் இன்று வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. நாளையுடன் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் அது குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பான படிவங்களில் கையெழுத்துப் போடுவதற்கு பொதுச் செயலாளர் பதவியை அங்கீகரிக்க வேண்டும். எனவே நாளையுடன் வேபுமனு தாக்கல் முடிவடைவதால் இன்று மாலைக்குள் முடுவெடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழில் மத்திய அரசின் போட்டித் தேர்வுகள்: ராமதாஸ் வரவேற்பு.. அப்படியே ஒரு கோரிக்கை!
டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க பத்து நாள்கள் கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவெடுக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியும் தனது தரப்பில் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது. கட்சியின் உச்ச பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியில் தான் இருப்பதாக ஒரு கோரிக்கையை ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்டது.
மூன்று நாள்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் ‘கூல்’ அறிவிப்பு!
அதிமுகவின் உட்கட்சி மோதல் தொடர்பாக சுமார் ஓராண்டு காலமாக நீதிமன்ற காட்சிகள் அரங்கேறிவருகின்றன. அவற்றில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு இன்று தெரிந்துவியும் என்கிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி