ஆப்நகரம்

குளியல் போட்டார் முதல்வர்: ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுதல்!

மயிலாடுதுறை காவிரி மகாபுஷ்கர விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடினார்.

TNN 20 Sep 2017, 10:14 am
மயிலாடுதுறை காவிரி மகாபுஷ்கர விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடினார்.
Samayam Tamil edappadi palaniswami in maha pushkaram
குளியல் போட்டார் முதல்வர்: ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுதல்!


முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 9.30 மணி அளவில் மகாபுஷ்கர விழாவில் பங்கேற்று புனித நீராடினார். இதனையொட்டி ஐஜி, டிஐஜிக்கள் தலைமையில் சுமார் 5 ஆயிரம் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர், புனித நீராடிய பிறகு நாகையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள செல்கிறார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில் மகாபுஷ்கரம் விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொண்டு, காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்றும் மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்றும் ஐதீகம்.

அடுத்த செய்தி