ஆப்நகரம்

இன்று பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை நடத்திய பின் இன்று பிரதமரையும் முதல்வர் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Samayam Tamil 8 Oct 2018, 6:15 am
பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.
Samayam Tamil cm-meeting-pm_2fd890f0-8b3d-11e8-b2f4-2ee9fa0c7dec


பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி சென்றார். அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்கிய அவர், இன்று பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்.

இந்தச் சந்திப்பின் போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தும் பிரதமரிடம் பேசுவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசு தமிழக அரசுக்கு பாக்கி வைத்துள்ள நிதி குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை நடத்திய பின் இன்று பிரதமரையும் முதல்வர் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி