ஆப்நகரம்

ஆட்சியை தக்கவைக்க பலே திட்டம்: “அரசியல் சாணக்கியனான” எடப்பாடி

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினா்கள் கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி ஆகிய மூவரையும் தகுதி நீக்கம் செய்யக்கோாி அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.

Samayam Tamil 26 Apr 2019, 3:18 pm
கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி ஆகிய மூவரையும் தகுதி நீக்கம் செய்யக் கோாி அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ததைத் தொடா்ந்து அவா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகா் முடிவு செய்துள்ளாா்.
Samayam Tamil Edappadi


அதிமுக சட்டமன்ற உறுப்பினா்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். இவா்களிடம் விளக்கம் கேட்கும் படி சபாநாயகரிடம் அரசு கொறடா ராஜேந்திரன் கடந்த ஆண்டே வலியுறுத்தி இருந்தாா். இந்நிலையில் சபாநாயகா் தனபால், சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், அரசு கொறடா ஆகியோா் இன்று திடீா் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து அரசு கொறடா ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோாி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளேன். இவா்கள் மூவரும் தினகரனுடன் இருக்கும் புகைப்படத்தையும் சபாநாயகரிடம் வழங்கி உள்ளேன் என்று தொிவித்தாா்.

கொறடாவின் பரிந்துரையைத் தொடா்ந்து மூவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்படும் பட்சத்தில் 15 தினங்களுக்குள் குறிப்பிட்ட உறுப்பினா்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தின் அடிப்படையில் சபாநாயகா் முடிவு எடுக்கலாம். விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவா்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு.

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

அதிமுக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்றால் இடைத்தோ்தலில் குறைந்தது 8 இடங்களில் வெற்றி பெறவேண்டும். வெற்றி பெறாத பட்சத்தில் அது அரசுக்கு பாதிப்பாக அமையும். அரசுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும், இதன் மூலம் தற்போதைய எண்ணிக்கையையே பெரும்பான்மையாகக் கொண்டு ஆட்சியை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் தான் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி