ஆப்நகரம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி: பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வசதியாக, அவர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை பள்ளி நிர்வாகங்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் (டிஇஓ) நாளை (ஜூன் 12) மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 11 Jun 2020, 9:47 pm
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டுவந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடைசியில் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (ஜூன் 9) அதிரடியாக அறிவித்தார்.
Samayam Tamil school


மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் அவர்களின் ஆண்டு இறுதி மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் தொடங்கியுள்ளது.

தரவரிசை பட்டியல்: மீண்டும் கெத்து காட்டிய சென்னை ஐஐடி!!

இந்த பணிக்கு வசதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்களது பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவவரிடம் நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி