ஆப்நகரம்

கல்வியை சமமாக அளிக்க வேண்டும்; சீமான்

மாணவர்கள் அனைவருக்கும் சமமாக கல்வியை அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

TNN 2 Sep 2017, 9:45 pm
மாணவர்கள் அனைவருக்கும் சமமாக கல்வியை அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil education should be equal says seeman
கல்வியை சமமாக அளிக்க வேண்டும்; சீமான்


நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனிதாவின் மரணத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதமாகவும், மாணவர்கள் யாரும் இதுபோன்ற தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் கூறினார்.


தொடர்ந்து பேசிய சீமான், மாணவி அனிதா தற்கொலை செய்யவில்லை, என்றும் மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.


மேலும், சிபிஎஸ்இ படிப்பவர்கள் தான் மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு உரிமைக்கும் ஒவ்வொருவர் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய உள்ளது என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி