ஆப்நகரம்

வரலாறு காணாத கடும் வீழ்ச்சி; ரூ.2க்கும் கீழே போன முட்டை விலை!

கொரோனா வைரஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் பீதியால் வரலாறு காணாத அளவு முட்டை விலை வீழ்ச்சி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Mar 2020, 12:58 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் தூய்மையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு பொருட்களை உண்ண வேண்டும். நன்கு வேகவைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுமா என்று கேள்விகள் எழுந்தன. இதுபற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்திகளை பரப்பி உள்ளனர். இதனால் இறைச்சி உண்போர் எண்ணிக்கை பெரிதும் குறைந்தது.
Samayam Tamil முட்டை விலை சரிவு


மேலும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதுவும் இறைச்சி உண்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக கோழி இறைச்சி, கோழி முட்டை விற்பனை சரிந்துள்ளது. இவற்றின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

இதன் காரணமாக விற்பனையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 கோழி பண்ணைகளில் இருந்து முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், அரசின் சத்துணவு திட்டத்திற்கும் முட்டை விநியோகம் செய்து வருகிறது. தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதால் முட்டைகள் தேக்கம் அடையத் தொடங்கியுள்ளன.

கொரோனா மையங்களாக மாறுகிறது சென்னை கல்லூரிகள்!

இந்நிலையில் கொரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் ஆகியவற்றின் தாக்கமும் முட்டை விற்பனையை கடுமையாக பாதித்துள்ளது. ஒரு முட்டை ரூ.5க்கும் அதிகமாக விற்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து ரூ.2.65ஆக குறைந்தது.

இந்நிலையில் இன்று 70 காசுகள் குறைந்து ரூ.1.95ஆக வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. ஏற்கனவே கோழிப் பண்ணையாளர்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஒரே நாளில் 70 காசுகள் குறைந்திருப்பது அவர்களுக்கு பேரிடியாய் இறங்கியுள்ளது. தேக்கம் அடைந்திருக்கும் லட்சக்கணக்கான முட்டைகளை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி