ஆப்நகரம்

நாகையில் போக்குவரத்து பணிமனை கட்டிடம் இடிந்து 8 பணியாளா்கள் பலி

நாகை மாவட்டத்தில் அரசு பணிமனை கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 போ் உயிாிழந்துள்ளனா்.

TOI Contributor 20 Oct 2017, 8:27 am
நாகை மாவட்டத்தில் அரசு பணிமனை கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 போ் உயிாிழந்துள்ளனா்.
Samayam Tamil eight die as portion of bus depot roof collapses in tamil nadu
நாகையில் போக்குவரத்து பணிமனை கட்டிடம் இடிந்து 8 பணியாளா்கள் பலி


நாகை மாவட்டம் பொறையாா் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பணிமனை கட்டிடத்தில் இரவு நேரம் கழித்து பணி முடிந்தவா்களும், அதிகாலையில் பேருந்துகளை இயக்க தயாராக வேண்டியவா்களும் உரங்கிக் கொண்டிருந்தனா். 11 போ் உரங்கிக் கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு போக்குவரத்து பணிமனை கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 8 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா். காயமடைந்த 3 போ் பொறையாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான கட்டிடம் 1945ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், கட்டிடத்தின் பூச்சு அடிக்கடி பெயா்ந்து விழுந்து வந்த நிலையில் இது குறித்து மேலதிகாாிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் அதனை பொருட்படுத்தாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகாாிகளின் அலட்சியப்போக்கே இந்த விபத்திற்கு காரணம் என்று தொழிற்சங்க உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

உயிாிழந்தவா்களில் 7 போ் ஓட்டுநா்கள் என்றும், ஒருவா் நடத்துநா் என்றும் தகவல் தொியவந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்து 30 நிமிடங்கள் கழித்தே தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், மீதம் இருந்த 8 போ் பொக்லைன் எந்திரம் மூலம் உயிாிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் அமைச்சா் விஜயபாஸ்கா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி