ஆப்நகரம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 63 வயதான ஓர் நபர் 3 பெண் குழந்தைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 8 Feb 2019, 9:21 pm
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 63 வயதான ஓர் நபர் 3 பெண் குழந்தைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil sexual harrasment


ஆர். பால்பாண்டி என்ற அந்த நபர் 14, 9, 8 ஆகிய வயதுள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவர்கள் மூவரும் உறவினர்கள் ஆவர்.

பாலியல் தொல்லை கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என அந்த நபர் சிறுமிகளை மிரட்டியுள்ளார். சிறுமிகளின் பெற்றோர் இதுகுறித்து திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க, பால்பாண்டி கைதானார்.

பால்பாண்டி சிறுவர் பாலியல் தொல்லைகள் தடுக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி