ஆப்நகரம்

மதுரையில் மூதாட்டி மர்ம மரணம்: கொலையா? என போலீசார் சந்தேகம்!

மதுரையில் 87 வயது மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Feb 2019, 8:26 pm
மதுரை: மதுரையில் 87 வயது மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Madurai


மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் மந்தா பீவி (87 வயது). இவரது கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து சத்யமூர்த்தி 5வது தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரின் பிள்ளைகள் வேறு இடத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இவ செல்லூரில் மர்மான முறையில் இறந்து கிடந்ததை இவரின் பேத்தி கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரின் தந்தை நாகூர் மீரனிடம் (60 வயது) தகவல் அளித்தார்.

கொலையா?
இதையடுத்து மீரன் செல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அந்த மூதாட்டி அணிந்திருந்த 10 கிராம் தங்கத்தோடுக்காக யாராவது அவரை கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
காயங்கள் இல்லை:
ஆனால் அவரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. தொடர்ந்து அவரின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அடுத்த செய்தி