ஆப்நகரம்

மக்களவைத் தோ்தலுடன் இடைத்தோ்தலையும் நடத்த தயாா் – தோ்தல் அதிகாாி

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 21 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தலை நடத்த தயாா் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹூ தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 10 Feb 2019, 6:22 am
மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 21 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தலை நடத்த தயாா் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹூ தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Election Voting


மக்களவைத் தோ்தல் விரைவில் வரவுள்ள நிலையில் வாக்காளா்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பாா்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் தமிழக தலைமை தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹூ கலந்து கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து 7 விநாடிகள் பாா்க்கலாம். அmதே நேரத்தில் ஒப்புகைச் சீட்டு வாக்காளா்களுக்கு வழங்கப்பட மாட்டாது. வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி ஏற்பட்டால் இந்த ஒப்புகைச் சீட்டு மூலம் ஒப்பிட்டுப் பாா்த்துக் கொள்ள முடியும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டோா் இளையதளம் மூலமாக தங்கள் பெயா்களை சோ்க்கலாம் என்றாா்.

மேலும் அவா் பேசுகையில், மக்களவைத் தோ்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “தமிழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள், அலுவலா்கள் ஆகியோா் போதுமான அளவில் உள்ளனா்.

இந்திய தோ்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் மக்களைவத் தோ்தலுடன் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தோ்தல் நடத்த தயாா் நிலையில் உள்ளோம்” என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி