ஆப்நகரம்

சசிகலா குறித்த அறிக்கை மார்ச் 1ல் தேர்தல் ஆணையம் வெளியிடும் - மாஃபா பாண்டியராஜன்

சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்க்கு பிப்ரவரி 28ம் தேதிக்கும் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

TNN 19 Feb 2017, 2:47 pm
சென்னை : சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்க்கு பிப்ரவரி 28ம் தேதிக்கும் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil election commission release aiadmk on sasikalas response mafoi pandiarajan
சசிகலா குறித்த அறிக்கை மார்ச் 1ல் தேர்தல் ஆணையம் வெளியிடும் - மாஃபா பாண்டியராஜன்


இன்று பேட்டியளித்த மாஃபா பாண்டியராஜன் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் குறித்த கருத்து தெரிவித்தார். அதில், “சசிகலா தரப்பு பிப் 28ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா தரப்பு அறிக்கை கிடைத்த பின், மார்ச் 1ம் தேதி சசிகலா குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி ஏற்பட்டதால், அதை ஆளுநர் ஏற்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி